என் மகள் இரண்டு வயதில் அருகில் உள்ள கடைக்கு கூட்டிச் சென்று உளுந்து வடை வாங்கிக் கொடுத்தேன். இது என்ன என்று கேட்டாள். நான் உளுந்த வடை என்று பதில் சொன்னேன். அவள் உடனடியாக கீழே உளுந்த வடையா என்று கேட்டாள். நான் திடுக்கிட்டு இல்லை அம்மா அது உளுந்து மாவில் செய்த வடை என்று சொன்னேன். இப்போதும் அவளிடம் வடை கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே கீழே விழாத வடை என்று சொல்லுவேன்.