Wednesday, September 1, 2010

கள்ளுண்ணாமை

௧.  மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

௨.  மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

௩.  கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

௪.  மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

௫.  ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

௬.  மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

நன்றி கலைஞரின் குறளோவியம்

மேலே வள்ளுவரின் வலிமையான திருக்குறளுக்கு கலைஞரின் வளமான தெளிவுரையைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

மிகவும் அழகாக கலைஞர் உரை விளக்குகிறது குடிப்பவ(ர்/ரை)

தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர்.

அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது.

கலைஞர் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் மக்களுக்கு பயன் கொடுக்கிறது.  ஆனால் இந்த டாஸ்மாக் அவை எல்லாவற்றின் பயனையும் ஒன்றும் இல்லாமல் வீணாக்கி விடுகிறது.

எனவே மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் மதுவிலக்கை நடைமுறைப் படுத்தினால் அது தமிழருக்கு நன்மையாகவும் கலைஞருக்குப் பெருமையாகவும் இருக்கும்.

எதிர்பார்ப்புடன் தமிழன் யோவான்.

No comments:

Post a Comment